இலங்கை

கொரோனா நோயாளிகள் அதி தீவிர சிகிச்சைக்கு மாற்றம்.

இலங்கையில் கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 3 நோயாளிகள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குவைத் நாட்டிலிருந்து இலங்கைக்கு வரவழைக்கப்பட்டவர்கள் எனவும் அப்போது முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலே இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது என சுகாதார வைத்திய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை இலங்கையில் கொரோனாவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1558 என்றும் அதில் பெரும்பாலானவர்கள் குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்களும் இலங்கை கடற்படையினரும் ஆவார்கள். எனினும் இதுவரை 754 நோயாளிகள் குணமடைந்துளளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க