இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

புற்றுநோய் பிரிவை சேர்ந்த கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

இன்றைய தினமும் (30.03) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவை சேர்ந்த கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

வைத்தியசாலை பணிப்பாளரின் செயற்பாடுகளுக்கு எதிராக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலையிலுள்ள கதிரியக்க பிரிவு ஊழியர்களுக்கு, பணிப்பாளரினால் கடந்த 02 மாதங்களாக மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கு அனுமதி வழங்கப்படாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க