இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

வேலை நிறுத்த போராட்டம்:சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு,எதிர்வரும் செவ்வாய்கிழமை (02.03) காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் டெட் கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள், கடந்த காலங்களில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க