இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாள்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் நாள் சம்பளமாக 1700 ரூபா வழங்க முடியும் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு, தற்காலிக குடில்களில் வசித்த 24 குடும்பங்களுக்கு, குடிதண்ணீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது அமைச்சர் உரையாற்றுகையில்,
மலையகத்தில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் குடும்பங்களுக்கு சௌமியபூமி காணி உரிமை வழங்கும் திட்டம் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன தினத்தன்று ஆரம்பமாகும் என்றார்.

கருத்து தெரிவிக்க