இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

நிலவும் வறட்சியான நிலைமை காரணமாக 15 நீர் விநியோக நிலையங்களின் நீர் விநியோகம் பாதிப்பு!!!

வறட்சி காரணமாக 06 நீர் விநியோக நிலையங்களில் நேர அட்டவணைக்கமைய நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கம்பளவத்த, புசல்லாவை, கொட்டகலை, ஹட்டன், ஊருபொக்க ஆகிய பகுதிகளில் நேர அட்டவணைக்கமைய நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது.

வறட்சியான வானிலை நிலவும் இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன்
நிலவும் வறட்சியான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க