இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

மிளகு உட்பட பல வாசனைப் பொருட்களை மீள் ஏற்றுமதி இடைநிறுத்தம்!!

இலங்கையில் விளையும் மிளகு, சாதிக்காய், மஞ்சள், இஞ்சி, ஏலக்காய் போன்ற சில வாசனைப் பொருட்களை மீள் ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

மீள் ஏற்றுமதிக்காக இந்த வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலம், உள்ளூர் விவசாயிகள் ஊக்கமிழப்பதாகவும், அதனால் உள்ளூர் வாசனைப் பொருட்களின் பயிர்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தற்போது உலகின் சிறந்த வாசனைப் பொருட்களில் முதலிடத்தில் உள்ள இலங்கையின் வாசனைப் பொருட்களின் தரத்தில் இது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க