இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் எதிர்வரும் (22.03) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.காரைநகர் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் 03 படகுகளுடன் இந்திய மீனவர்கள் 22 பேரும் நேற்றிரவு(09.03) கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து குறித்த 22 இந்திய மீனவர்களும், கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளால் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கருத்து தெரிவிக்க