இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

வவுனியா மதவாச்சி பகுதியில் தனியார் பஸ்ஸொன்று விபத்து!

வவுனியா மதவாச்சி பகுதியில் தனியார் பஸ் சாரதியின் கவனக்குறைவால் அருகிலிருந்த வீட்டின் கராஜ் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து மதவாச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனியார் பஸ்ஸின் சாரதி திடீரென சுகயீனமடைந்ததால் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் மதவாச்சியில் வீடொன்றுடன் கூடிய கராஜ் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 6 பேர் சிறு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கருத்து தெரிவிக்க