இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இரண்டு ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர் மீண்டும் சேவையில்!!

கடந்த 5ஆம் திகதி கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் ரயிலில் குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டியில் இரண்டு வெளிநாட்டினர் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்ததால் தீவிரநிலை ஏற்பட்டிருந்தது.

இச்சம்பவத்தின் அடிப்படையில் இரண்டு ரயில் நிலைய அதிபர்கள், ரயில் கட்டுப்பாட்டாளர் மற்றும் ரயில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர் ஒருவரின் சேவையை இடைநிறுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில்,இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் மூவர் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இடைநிறுத்தப்பட்ட நாவலப்பிட்டி ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரியின் பணி இடைநிறுத்தம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க