இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

வில்கமுவ பல்லேகம மத்திய மகா வித்தியாலய மாணவர்களை நேரில் சந்தித்த ஜனாதிபதி!

‘அஸ்வெசும’ வேலைத் திட்டம் தொடர்பாக வில்கமுவ பிரதேச செயலகத்தின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர், பல்லேகம மத்திய மகா வித்தியாலயத்தின் மைதானத்திலிருந்த மாணவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடி, அவர்களின் கல்விச் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டறிந்துகொண்டார்.

மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் மற்றும் வளப்பற்றாக்குறை பற்றி ஆராய்ந்து அங்கிருந்த ஆசிரியர்களுடனும் கலந்துரையாடிய ஜனாதிபதி, இதன்போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவதாக மாணவர்களுக்கு உறுதியளித்து அவர்களின் எதிர்கால கல்விச் செயற்பாடுகளுக்கும் வாழ்த்து கூறினார்.

கருத்து தெரிவிக்க