இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

படகுகளில் 400 க்கும் மேற்பட்ட பக்கதர்கள் கச்சதீவு ஆலயத்திற்கு சென்றுள்ளனர்!

2024 ம் வருடத்திற்கான கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் (23.02) 40 படகுகளில் 400 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமன்னார் துறைமுகத்தின் ஊடாக கச்சதீவு ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

மேலும் இந்த வருட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்து பக்தர்கள் எவரும் வருகை தரவில்லை என கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

கருத்து தெரிவிக்க