இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 13 இலட்சம் தரவுகள் அழிப்பு!!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய முனைய நிறுவனத்தின் எரிபொருள் களஞ்சியப்படுத்தல் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பனவற்றுடன் தொடர்புடைய 13 இலட்சம் தகவல்கள் (தரவுகள்) பிரதான தரவுக் கட்டமைப்பிலிருந்து அழிக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டிலிருந்து தரவு அழிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதுடன் எரிபொருள் நெருக்கடி நிலவிய 2022 ஆம் ஆண்டிலேயே பெருமளவான தரவு அழிப்பு செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையை மேலதிக நடவடிக்கைகளுக்காக அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திற்கும் கணக்காய்வாளர் திணைக்களத்திற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க