இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள்

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 7,466 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.எனினும் இந்த முறைப்பாடுகள் 2023 ஆம் ஆண்டு அதிகரித்துள்ளன.

மேலும், சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக தற்போதுள்ள சில சட்டங்களை திருத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க