இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடு இலங்கை

தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணத்தைக் கொண்டுள்ள நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக Verite Research நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளின் உள்நாட்டு மின்சாரக் கட்டணத்தை விட இலங்கையின் உள்நாட்டு மின்சாரக் கட்டணம் 3 மடங்கு அதிகம் என பகுப்பாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டில், பெப்ரவரி, ஜூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இலங்கை தனது மின்சாரக் கட்டணங்களை மூன்று முறை திருத்தியது. மின்சாரம் வழங்குவதற்கான முழு செலவையும் திரும்பப் பெறுவதே அதிகரிப்புக்காண காரணமாகும்.

கருத்து தெரிவிக்க