உலகம்சமீபத்திய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

போலந்தில் குவியும் உக்ரைன் பிரஜைகள்

கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி, ரஷ்யா தனது அண்டை நாடு மீது படையெடுத்ததை தொடர்ந்து, உக்ரைனியர்கள் இவ்வாறாக தஞ்சம் புக ஆரம்பித்ததாக தெரியவந்துள்ளது.
 கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 17 ஆயிரத்து 900 உக்ரைனியர்கள் போலந்து நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது அதிகளவான உக்ரேனியர்கள் போலந்தில் தஞ்சமடைய ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, உக்ரைனியர்கள் போலந்தில் தஞ்சமடைவதற்கு ஆதரவாக அந்த நாட்டின் 62 வீதமானனோர் ஆதரவு தெரிவித்ததாக அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க