இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கொக்குவில் இந்துக்கல்லூரியில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில் நுட்பபீடத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் பதில் அதிபர் கே.குமணன் தலைமையில் 05.02 பிற்பகல் இந்த திறப்பு விழா இடம் பெற்றது.

இந்நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன்,வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஜோன் குயின்டஸ்,அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

76 மில்லியன் செலவில் குறித்த தொழில்நுட்ப ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க