அழகு / ஆரோக்கியம்இதழ்கள்

தக்காளி பேஸ்ட்டைப்  பயன்படுத்தினால் சருமம் நன்றாக இருக்கும்!

பெரும்பாலான பெண்கள் தங்கள் முகத்தை கவனித்துக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள், ஆனால் தங்கள் கழுத்தை மறந்துவிடுகிறார்கள். இதனால் கழுத்து மட்டும்  கருமையாக இருக்கும். இக்கருமையை போக்க தக்காளி பேஸ்ட்டைப் பயன்படுத்துவது நல்லது. தோல் சுருக்கங்களைத் தடுத்து, சருமத்தை பளபளக்கச் செய்வதற்கும் தக்காளி சிறந்தது. தக்காளி பேஸ்ட்டைப்  பயன்படுத்துவதால் சருமம் நன்றாக இருக்கும்.

முகத்தை கவனித்துக்கொள்வதற்கான மற்றொரு வழி, வெள்ளரி சாற்றை தக்காளியுடன் சேர்த்து  பயன்படுத்துவது. இவ்வாறு செய்து வந்தால்  கருவளையங்கள் காணாமல் போகும். அது மட்டுமின்றி இது முகப்பரு வடுக்களை போக்க உதவும். தக்காளிச் சாறு, தேன், பேக்கிங் சோடா ஆகியவற்றைக் கொண்டு பேஸ்ட் ஆக்கிய பின்னர் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களில் தடவி வர முகத்தில் உள்ள  எண்ணெய் பசை மற்றும் கருமை நிறத்தைப் போக்கலாம்.

கருத்து தெரிவிக்க