இந்தியாஇலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்பண்பாடு

இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வுகள் யாழில் அரங்கேறியது

இந்தியக் கலைஞர்கள் வழங்கும் இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்தியாவின் 75 – ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக யாழ் இந்திய துணைத் தூதரகமும் இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயமும் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்தன.

இந்நடன நிகழ்வுகளின் வரிசையில் ஒடிசி,கதகளி, சத்ரியா மற்றும் மணிப்புரி முதலானவை இடம்பெற்றது.

 

கருத்து தெரிவிக்க