உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், நிவாரணப்பொதி அல்ல- பிரதமர்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், பயங்கரவாதிகளுக்கு நிவாரணப்பொதியாக இருக்காது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் இதனை நேற்று தெரிவித்தார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் மூலம் பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தரப்பினர் தொடர்ந்தும் கூறிவருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ரணில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் கட்சிகள், தமது பரிந்துரைகளை இந்த சட்டமூலத்துக்குள் கொண்டு வர முயற்சிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்து தெரிவிக்க