உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சீனாவில் அதி பயங்கர தீ விபத்து

சீனாவின் ஜியாங்ஷி மாகாணத்தின் Yusui மாவட்டத்திலுள்ள வர்த்தக தொகுதியொன்றின் ஏற்பட்ட பாரிய தீ விபதொன்றினால் 25 பேர் உயரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 120 மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், காவல்துறை மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் போன்றோர் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர் .
 தீவிபத்தில் சிக்கி சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.
இது போன்று, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க