உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

காவல்துறை அதிபருக்கும் பாதுகாப்பு முன்னாள் செயலருக்கும் உயர்நீதிமன்றத்தின் அறிவித்தல்

காவல்துறை அதிபரையும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருக்கும் அறிவித்தல்களை அனுப்புமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ஏப்ரல் 21 ஆம் திகதியன்று கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் தந்தையார் தாக்கல் செய்த மனுவின் மீதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் காவல்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் சார்பில் இன்று எவரும் முன்னிலையாகாமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.
இந்தநிலையில் வழக்கு மே 21க்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

கருத்து தெரிவிக்க