உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

கொழும்பின் தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு முன்கூட்டியே 15முறை அறிவிக்கப்பட்டது- சரத் பொன்சேகா

இலங்கையின் அண்மைய தாக்குதல்கள் தொடர்பில், ஜனாதிபதிக்கு, பாதுகாப்பு சபையி;ல் வைத்து 15 தடவைகள் வரை அறிவி;க்கப்பட்டது.
எனினும் அவர் அவற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி உரிய கட்டளைகளைப் பிறப்பிக்கவும் இல்லை. அத்துடன் அவற்றை கருத்திற்கொள்ளவும் இல்லை என்று பொன்சேகா குறிப்பிட்டார்.
எனினும் தற்போது தமது தவறை மற்றவர்கள் மீது சுமத்துகிறார்.
இந்தநிலையில் காவல்துறை மா அதிபரை நீக்குவதில் எவ்வித நியாயங்களும் இல்லை என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க