இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உயர் நீதி மன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

2022 இல் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலின் போது அவரக்கு முன்னறிவிப்பு கிடைத்தது.

தனக்கு கிடைத்த இரண்டு சந்தர்பங்களிலும் தனது பொறுப்புக்களை நிறைவேற்ற தவறியதாக ரகுமான் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுமதி வழங்குவதை தடுக்கும் வகையில் அரசியலமைப்பு பேரவைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க