இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணருக்கு விளக்கமறியல்

வைத்தியசாலை பெண் ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் கராப்பிட்டிய சத்திரசிகிச்சை நிபுணரை ஜனவரி 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 61 வயதான விசேட வைத்தியர், தனியார் வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெற்றிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு தனியார் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வைத்தியரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க