இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கைக்கு ரஷ்ய அரசாங்கம் வழங்கியுள்ள நிதியுதவி

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் 17 ஜனவரி 2024 ரஷ்யா விலிருந்து இலங்கைக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சூரியகாந்தி எண்ணெய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள உலக உணவுத்திட்ட ஒத்துழைப்புத் தரப்பு செயலக வளாகத்தில் இந்த நன்கொடை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதுடன் ரஷ்ய அரசாங்கத்தின் நிதியுதவி 2023 டிசம்பர் 30 ஆம் திகதி 117.3 மெட்ரிக் டன் சூரியகாந்தி எண்ணெய், 2024 ஜனவரி 04 ஆம் திகதி 13.1 மெட்ரிக் டன் சூரியகாந்தி எண்ணெய் ரஷ்ய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக 351.9 மெற்றிக் டன் சூரியகாந்தி எண்ணெய் ரஷ்ய அரசாங்கத்திடம் இருந்து 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க