உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

சரத் என் சில்வாவுக்கு எதிரான வழக்கில் இருந்து மற்றும் ஒரு நீதியரசரும் விலகல்

நீதிமன்றத்தை அவமதித்தக் குற்றத்துக்காக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் இருந்து மற்றும் ஒரு நீதியரசர் விலகியுள்ளார்

உயர்நீதிமன்ற நீதியரசர் பிரசன்ன ஜெயவர்த்தனவே இன்று விசாரணையில் இருந்து விலகிக்கொண்டார்.

தனிப்பட்ட காரணத்தினால், தாம் இதில் இருந்து விலகிக்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த பெப்ரவரியில் பிரியந்த ஜெயவர்த்தன என்ற நீதியரசரும் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுக்கூட்டம் ஒன்றில் வைத்து சரத் என் சில்வா, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார் என்று குற்றம் சுமத்தி, 3 தனியாட்கள், வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க