இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாடசாலை விடுமுறை தினம் நீடிப்பு

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் தவணையின் இரண்டாம் கட்டம் 2024 பெப்ரவரி 05 ஆம் திகதி திங்கட்கிழமை  ஆரம்பமாக உள்ளதாக  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் 3 ஆம் தவணையின் இரண்டாம் கட்டத்தை 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 01 ஆம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு முதலில் தீர்மானித்திருந்த போதிலும் தற்போது நடைபெற்று வரும் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் விவசாய விஞ்ஞான வினாத்தாளை 2024 பெப்ரவரி 01 ஆம் திகதி மீள் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் எடுத்த தீர்மானத்தின் காரணமாக இது ஒத்திவைக்கப்பட்டது.
விவசாய விஞ்ஞான பாடத் தாள் 1 மற்றும் 2 ஆகிய இரு தாள்களும் பரீட்சைக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் கசிந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பரீட்சைகள் திணைக்களம் நடந்தேறிய பரீட்சையை இரத்துச் செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க