இலங்கை

இலங்கையில் பேரூந்து கட்டணங்களில் ஏற்படப் போகும் மாற்றம்!

தற்போது இலங்கை மக்களின் அன்றாட செயற்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாலும், கொரோனா தாக்கத்தினை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒரு வழியே பேரூந்துகளில் ஆசனங்களிற்கு ஏற்ப பயணிகள் ஏற்றிச் செல்லலாகும். எனினும், பேரூந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றும் போது அதன் கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன முன்வைத்துள்ளார். அத்துடன், பேரூந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றும் நடைமுறையை சட்டமாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்தாலோசித்து வருவதாகவும் இச் சட்டம் அமுலாகும் பட்சத்தில் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே, இது தொடர்பாகவும் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க