சினிமாசினிமா

SK ரசிகர்களின் “அயலான்”

கொடைக்கானலில் தன் அம்மாவுடன் வசிக்கும் சிவகார்த்திகேயன் இயற்கையையும் விலங்குகளையும் நேசிக்கிறார்.

ஒரு கட்டத்தில் வேலை தேடி சென்னைக்கு வருகிறார். அப்போது வேற்று கிரகத்தில் இருந்து விழுந்த அரிதான கனிமத்தை பயன்படுத்தி மனித இனத்துக்கு கேடு செய்யும் திட்டத்தை தொடங்குகிறான் வில்லன். அந்த கனிம பொருளை தேடி ஏலியன் பூமிக்கு வந்து சிவகார்த்திகேயனோடு நட்பு கொள்கிறது.

வில்லனால் ஏலியனுக்கு ஆபத்து வருகிறது. ஏலியனை காப்பாற்றவும், வில்லன் சதித்திட்டத்தை முறியடிக்கவும் சிவகார்த்திகேயன் போராடுகிறார். அது நடந்ததா என்பது மீதி கதை. சிவகார்த்திகேயன் ஹீரோயிசம் இல்லாத யதார்த்தமான நடிப்பில் கலக்கி இருக்கிறார். இயற்கை மீது பரிவு, அம்மா மீது பாசம், நண்பர்களுடன் ஜாலி அரட்டை, காதலியிடம் கொஞ்சல், வில்லனை வில்லாக வளைத்து பந்தாடுவது என படம் முழுக்க ரசிகர்களை கட்டிப் போடும் மந்திரத்தை வழக்கம்போல் ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியில் ஏலியனோடு தோளோடு தோள் சேர்த்து சண்டையிடும் காட்சி ரசிக்க வைக்கிறது.

கருத்து தெரிவிக்க