பொன்மொழிகள்

சிந்தித்து வாழ வேண்டும்! கிருபானந்த வாரியார்

  • சிலர் எதற்காகப் பேசுகிறோம், சிலர் எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பேசுகிறோம் என்று வரைமுறையில்லாமல் பேசி விடுகிறார்கள். இதனால் எந்த ஒரு நன்மையும் உண்டாகப்போவதில்லை. ஆகவே, முடிந்தவரை அமைதியாக இருங்கள்.
  • நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தும் செப்புப் பாத்திரத்தித்தில் களிம்பு ஒட்டியிருந்தால், அதை நாம் நன்றாகத் துலக்கிப் பயன்படுத்த வேண்டும். இதுவே நெல்லாக இருந்தால், உமியை விலக்கி, சமைக்கப் பழகவேண்டும். அதுபோல், மனிதர்களாகிய நாம் தீமைகளை விலக்கி, நன்மைகளைச் சிந்தித்து வாழ வேண்டும்.
  • திருப்தி என்பது மனநிறைவு, கிடைத்த பொருளைக் கண்டு இதுவாவது கிடைத்ததே என்று திருப்தி அடைவதுவே அறிவுடைமை. அங்ஙனம் திருப்தி அடைபவனைக் கண்டு கடவுள் அருள்புரிகின்றார். திருப்தி மனிதனை வாழ வைக்கும். அதிருப்தி மனிதனை அழித்து விடும்.

கருத்து தெரிவிக்க