உள்நாட்டு செய்திகள்புதியவை

பாதுகாப்பை கையாளும் பொறுப்பு பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம்

நாட்டின் பாதுகாப்பை கையாளும் பொறுப்பு பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் ஒப்படைக்கப்படும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் அவர் இதனைக்குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகா வெறுமனே காட்போட் வீரர் அல்ல. அவர் நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை விரட்டிய வீரராவார்.

எனினும் முன்னைய அரசாங்கம் அவரை 2010ஆம் ஆண்டு சிறையில் அடைத்தது.

இந்தநிலையில் தமது அரசாங்கத்தில் யார் சிறையுடையை அணியவேண்டும் என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

இதேவேளை தமது அரசாங்கத்தில் போதைவஸ்துவுக்கும் பயங்கரவாதத்துக்கும் இடம்தரப்படமாட்டாது என்று சஜித் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க