உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு- மலேசியாவில் இரண்டு அரசியல்வாதிகள் கைது

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பை கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு அரசியல்வாதிகள் உட்பட்ட 7பேரை மலேசிய காவல்துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர்.

2014ஆம் ஆண்டு மலேசியா, தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்தது.

இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கியமை மற்றும் நிதிசேகரித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காகவே அதிகாரிகள் 7பேரையும் கைதுசெய்துள்ளனர் என்று மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஐயூப் கான் மிடின் பிச்சை தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் இரண்டு அரசியல்வாதிகள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக உரையாற்றியமைக்காகவே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் நடவடிக்கை மலேசியாவின் நன்மதிப்பை கெடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க