உள்நாட்டு செய்திகள்புதியவை

சர்வதேச அமைப்புக்கள் மஹிந்தவை சந்தித்து பேச்சு

அமரிக்காவை தலைமையகமாகக் கொண்ட என்டிஐ என்ற தேசிய ஜனநாயக நிறுவகம் மற்றும் ஐஆர்ஐ என்ற சர்வதேச குடியரசு நிறுவகம் ஆகியவற்றின் உயர்மட்டக்குழு இன்று தூதுவர் கார்ல் இன்டர்பேத் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தது.

நடைமுறை அரசியல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சூழ்நிலைகளை கண்காணிக்கும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது அரசாங்கத்தினால் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச உட்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவர்களை கைதுசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மஹிந்த ராஜபக்ச முறைப்பாட்டை செய்தார்.

இதேவேளை இந்த குழுவினர் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க