உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் தொடரூந்து சேவைகள் பாதிப்பு!!

தொடரூந்து தொழிற்சங்கங்கள் நேற்று (25) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

தொடரூந்து திணைக்களத்தின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்களைச் சேர்ந்த ஊழியர்கள் சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கபட்டுவருகின்றது.

குறித்த தொழிற்சங்க போராட்டத்தினால் வவுனியா தொடரூந்து சேவைகள் பாதிக்கபட்டுள்ளதுடன், பயணிகள் அசௌகரியங்களையும் சந்தித்த வண்ணம் உள்ளனர்.

தொழிற்சங்க நடவடிக்கையால், இன்று (26) காலை பயணிக்கவிருந்த அனேகமான ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க