உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா சுஜாதீன இளைஞர்களால் கன்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,நீதிதுறையை அவமதித்த தேர்ர்களை கைதுசெய்யகோரியும்,இந்து ஆலயங்களின் புனித தன்மையை பாதுகாக்குமாறு தெரிவித்தும் வவுனியா மாவட்ட சுஜாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் ஆர்பாட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாபழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி, சிவமோகன்,சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,முன்னாள் மகாணஅமைச்சர் ப.சத்தியலிங்கம்,உள்ளூராட்சிசபை தலைவர்கள்,மற்றும் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளை சார்ந்தோர், பொதுஅமைப்பினர்,பொதுமக்கள்,என பலர் கலந்துகொண்டனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது ஜனநாயாக ஆட்சியா,பௌத்த பேரினவாத பிக்கு ஆட்சியா,காவி உடையில் காடையர்களா,மதப்பிரச்சினையை தூண்டாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழிப்பியிருந்தனர்.
இதன்போது பௌத்த பிக்குகளின் உருவப்படம் அடங்கிய பதாதைகளும் தீயிட்டு எரிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க