உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

செம்மலை சம்பவத்திற்கு எதிர்பு தெரிவித்து செட்டிகுளத்திலும் போராட்டம்!!

பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் பௌத்த பிக்குகளின் அடாவடித்தனத்தையும் கண்டித்து செட்டிகுளம் பிரதேசத்தில் கண்டன பேரணி ஒன்று இன்றுகாலை முன்னெடுக்கப்பட்டது.
தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்,என்றும் நீதித்துறைக்கு சரியான மதிப்பும் மரியாதையும் வழங்கப்படகோரியும் குறித்த ஆர்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
செட்டிகுளம் சமுர்தி வங்கிக்கு முன்பாக ஆரம்பமான பேரணி செட்டிகுளம் நகர் வரைக்கும்சென்று முடிவுற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் செட்டிகுளம்வர்தகர்கள், ஆலய நிர்வாகத்தினர், சமூக ஆர்வலர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல்கட்சியினர் என பலர் கலந்துகொண்டனர்.
இதேவளை  ஆர்பாட்ட பேரணியின் போது செட்டிகுளம் பகுதி வர்தக நிலையங்களும் மூடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க