உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘சஜித்தை வரவேற்கும் நிகழ்வு களுத்துறையில்’

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட “சஜித் வருகிறார்” பொதுக்கூட்டம் மத்துகம நகரில் ஆரம்பமாகியுள்ளது.

சஜித்தை வரவேற்க களுத்துறையில் ஆதரவாளர்கள் கூடுகின்றனர்.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாஸவை வரவேற்பதற்காக களுத்துறையில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்தக்கூட்டம் மத்துகம பொது மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்துக்காக பெருமளவான மக்கள் கூடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்துகம சென்றுள்ளனர்.

கருத்து தெரிவிக்க