உள்நாட்டு செய்திகள்

புதிய சட்டமா அதிபராக லிவேரா

மன்றாடியார் நாயகம், தப்புல்ல டி லிவேரா, புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு சபை இந்த நியமனத்தை இன்று வழங்கியது.

ஜனாதிபதி இதற்கான பரிந்துரையை செய்திருந்தார்.

சட்டத்துறையில் 36 வருடக்கால அனுபவத்தைக் கொண்டுள்ள லிவேரா, அரச சட்டவாதியாகவும், உதவி மன்றாடியார் நாயகமாகவும்,மேலதிக மன்றாடியார் நாயகமாகவும் செயற்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் நாட்டின் 47வது சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

கருத்து தெரிவிக்க