உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

நீரோடையை கடக்க முயன்றவர் நீரோடைக்குள் விழுந்து மரணம்

மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மொக்கா தோட்டத்தில் நேற்று பிற்பகல் (17) பாதையை கடக்க முற்பட்ட ஆண் ஒருவர் நீரோடை ஒன்றில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார் .

மஸ்கெலிய எடம்ஸ்பீக் தோட்டத்தை சேர்ந்த 52 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான காளிமுத்து என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் .

சம்பவம் குறித்து தெரியவருவது எடம்ஸ்பீக் தோட்டத்தை சேர்ந்த குறித்த நபர் மொக்கா தோட்டத்திலுள்ள தமது உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு வீடு திரும்பிகொண்டிருக்கையில் அவ்வழியில் உள்ள சிறிய பாலம் ஒன்றை கடந்து செல்லும் போது தவறி நீரோடைக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு பண்டார குழுவினர் சம்பவம் குறித்து விசாரணை மேட்கொண்டுள்ளனர்.

மேலும் ,சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக மஸ்கெலிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபடவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

(நிருபர் ஞானராஜ் – சாமிமலை)

கருத்து தெரிவிக்க