உள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

47 வருடங்கள் கழித்து சமநிலையில் முடிந்த ஏஷஸ் தொடர்

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஏஷஸ் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது.

நேற்று முடிந்த ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் ஏஷஸ் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது.

தொடர் சமநிலையில் முடிந்தால் ஏஷஸ் கோப்பை, இதற்கு முந்தைய தொடரை யார் வென்றார்களோ, அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி அவுஸ்திரேலியாவிடம் ஏஷஸ் கோப்பை வழங்கப்பட்டது.

1972-ம் ஆண்டு இங்கிலாந்து ஏஷஸ் கோப்பையை தக்கவைத்தது. ஆனால், தற்போது அவுஸ்திரேலியா கோப்பையை தக்கவைத்துள்ளது.

1938, 1962-63, 1965-66, 1968-ல் நடந்த ஏஷஸ் தொடர்களும் சமநிலையில் முடிந்துள்ளன.

கருத்து தெரிவிக்க