உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கால்வாய் ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

கந்தளை – வராகெலே பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கந்தளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மது அருந்திக் கொண்டிருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் மற்றையவரை கத்தி ஒன்றால் தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர், சடலத்தை குறித்த கால்வாயில் வீசியுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கந்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க