உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பாலித தெவரப்பெருமவுக்கு பிணை

நீதிமன்ற உத்தரவைமீறிய குற்றச்சாட்டில் கைதான பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட ஆறு பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதி அமைச்சர் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் இன்று (16) மத்துகம நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, ஒரு இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீர பிணையிலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதிமன்றின் உத்தரவினையும் மீறி தமிழ் பெருந்தோட்ட தொழிலாளி ஒருவரின் சடலத்தை தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்ததாக பிரதி அமைச்சர் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க