உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘நானே ஜனாதிபதி வேட்பாளர்” – ரணில் திட்வட்டம்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு தான் தயாராகவே இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அரசியல் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகனிடம் கருத்து வெளியிட்ட நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன கூறியதாவது,

” ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வது சம்பந்தமாகவுமே சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

தேர்தலில் தான் போட்டியிடவுள்ளார் என்பதை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார். எனவே, அவருக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என நாம் உறுதியளித்தோம்.

சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளை நன்கறிந்தவரே பிரதமர் ரணில். தீர்வு திட்டமும் அவரிடம் உள்ளது. எனவே, ஏனைய இடதுசாரிகளின் ஆதரவையும் பெறுவதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது” என்றார்.

கருத்து தெரிவிக்க