உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பொலிஸாரை தாக்கிய நபர்களை விளக்கமறியல் வைக்க உத்தரவு

மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்க்குற்ப்பட்ட சாமிமலை பகுதியில் கடந்த 11/ 09 /2019 அன்று இரவு ஏற்பட்ட அசம்பாவிதத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதாகவும் உணவக உரிமையாளரை தாக்கியதாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களை எதிர்வரும்  25/ 09 /2019 வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிபதியால் நேற்று (12  ) தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 11/ 09 / 2019  இரவு 7  மணியளவில்  குறித்த  நபர்கள்  அப்பகுதியில் உள்ள கலாச்சார மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற ருதுசாந்தி  நிகழ்வு ஒன்றுக்கு சென்று மது போதையில்  அருகில் உள்ள உணவகம் ஒன்றுக்குல்  சென்று உணவக உரிமையாளரை தாக்கியயுள்ளனர்.

இது குறித்து உணவக உரிமையாளர் மஸ்கெலிய பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்க்கமைய அங்கு வந்த பொலிஸ் அதிகாரியை விசாரண நடத்த விடாது இடையூறு விளைவித்து தாக்கியதாகவும் இதனால் குறித்த பகுதியில் சில மணிநேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த  நபர்கள்  11 / 09 /2019  அன்று உணவக உரிமையாளரை தாக்கியது பொலிசாரின் சேவைக்கு இடையூறு விளைவித்தது பொலிஸாரை தாக்கியது போன்ற குற்றங்களுக்காக   மஸ்கெலிய  பொலிசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க