உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

உடைந்து விழுந்தது பேருந்து தரிப்பிடம்

மஸ்கெலிய  காட்மோர் பிரதான பாதையில்  மிட்லோதியன் தோட்டப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடம் உடைந்து குப்புற சாய்ந்துள்ளமமையால் தாம் பல சிரமங்களை எதிர்கொள்வதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பேருந்து தரிப்பிடம் கடந்த சில மாதங்களாக மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் பழுதடைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொட‌ர்பாக இப்பகுதி மக்கள் மஸ்கெலிய பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பேருந்து தரிப்பிடத்தை  பாடசாலை மாணவர்கள்  முதல் பொதுமக்கள் வரை  பயன்படுத்தி வருகின்றனர்.

மழை காலங்களில் இப்பகுதி மக்கள்  பேருந்துக்காக  இந்த தரிப்பிடத்திலேயே காத்திருக்க வேண்டும் என்றும் பேருந்து தரிப்பிடம் குப்புற சாய்ந்துள்ளமமையால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிகாட்டுகின்றனர் .

எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதனை  புனரமைத்து தர முன் வரவேண்டும் என்று மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர் .

(நிருபர் சாமிமலை  ஞானராஜ்)

கருத்து தெரிவிக்க