உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

நான் பதவிவிலக மாட்டேன்- ஜனாதிபதி

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களுக்கு பொறுப்பேற்று தாம் பதவிவிலகப்போவதி;ல்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர் மட்டம் வரை தகவல் கிடைத்துள்ளது.
எனினும் அதனை தாம் உரியவகையில் மதிக்கவில்லை என்றும் அவர் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வேறு எந்த நாட்டிலாவது வன்முறைகளுக்கு பொறுப்பேற்று தலைவர்கள் விலகியதுண்டா? எனவே தாமும் இந்த தாக்குதலை தடுக்கமுடியாமல் போனமைக்காக பதவிவிலகப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் உண்மையை கண்டறிந்து உரியவர்களுக்கு தண்டனையளிப்பதே தமது பொறுப்பு என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க