உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சிறைக்கைதிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

சிறைக்கைதிகள் வாரத்தினை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் கண்பார்வைக்குறைபாடுகள் உள்ள கைதிகளுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு இன்று (12.09) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
 
சிறிசபாரட்ணம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் 30 கைதிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அக் கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும், தண்டப்பணம் கொடுக்க முடியாதிருந்த சிறை கைதிகள் இருவரிற்கு தண்டப்பணம் வழங்கப்பட்டுள்ளது..
 
சிறிசபாரட்ணம் அறக்கட்டளையின் சர்வதேச ஏற்பாட்டளார் ஏ.நித்தியானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் சிறைச்சாலை உயர் அதிகாரிகளும், சிறைச்சாலை நலன்புரி சங்க உறுப்பினர்கள், சமூக அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க