உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

12 வயதுடைய சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சிற்றப்பா கைது

12 வயதுடைய சிறுமியை 39 வயதுடைய நபர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

தெனியாய டவுன்சைட் தோட்டத்தில் 12 வயதுடைய பாடசாலை சிறுமி ஒருவரை 39 வயதுடைய நபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்த சிறுமி தனது உறவினருடன் தெனியாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்தே குறித்த நபரை தெனியாய பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

இச்சிறுமி தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாத்தறை வைத்தியசாலைக்கு வைத்திய பரிசோதணைக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

12 வயதுடைய தேவகுமாரி ஜெயினா என்ற சிறுமியே இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 39 வயதுடைய நல்லதம்பி நாதன் என்பவராவார்.

குறித்த நபர் இச்சிறுமியின் சிற்றப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நாளை மொறவக்க நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க