உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பொலிஸாரை தாக்கிய நபர்கள் கைது

மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்க்குற்பட்ட  சாமிமலை  பகுதி உணவகம் ஒன்றில் நேற்று இரவு நடந்த அசம்பாவிதத்தில் அப்பகுதியை சேர்ந்த  மூன்று இளைஞர்கள்  மஸ்கெலிய பொலிசாரால்  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்டுள்ளனர் .

நேற்று இரவு மதுபோதையில் வந்த இவர்கள்  உணவக உரிமையாளரிடம் தர்க்கத்தில் ஈடுபட்டு   உணவக உரிமையாளரை தாக்கியதாகவும்  இது குறித்து  உணவக உரிமையாளர் மஸ்கெலிய காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.

அதனை அடுத்து அவ்விடத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் இருவர் வருகை தந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதாகவும் குறித்த நபர்கள்  பொலிஸாரின் சேவைக்கு  இடையூறு விளைவித்து  கடமையிலிருந்த  பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதாகவும்  தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவ்விடத்திற்கு  மேலும் பொலிஸாரும்  அதிரடிபடையினரும் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டனர் இதனால் அப்பகுதியில் சில மணிநேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

மேலும்   குறித்த நபர்கள் உணவக உரிமையாளரை தாக்கியது  பொலிசாரின் சேவைக்கு இடையூறு விளைவித்து  பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியது போன்ற குற்றத்திற்காக  சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளனர் .

குறித்த நபர்கள் மூவரையும் இன்று  12 /09/2019    அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க