சினிமா

“பரியேறும் பெருமாள்” படத்திற்கு விருது

புதுச்சேரி அரசு ஒவ்வொரு வருடமும் இந்திய திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டிற்கான விழாவில் தமிழில் கடந்த ஆண்டு வெளியான ‛பரியேறும் பெருமாள்’ படம் சிறந்த படமாக விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முதல்வர் நாராயணசாமி “சுவாமி சங்கரதாஸ் சுவாமிகள்” விருது வழங்கி கௌரவிக்கின்றார்.

நாளை 13ம் திகதி மாலை 6 மணிக்கு தட்டாஞ்சாவடி முருகா திரையரங்கில் விழா தொடங்குகிறது. விழாவில் நகர்கீர்த்தன் (பெங்காலி), சூடானி ப்ரம் நைஜீரியா (மலையாளம்), மகாநடி (தெலுங்கு), ராஷி (இந்தி) ஆகிய படங்கள் சிறப்பு திரைப்படங்களாக திரையிடப்படுகிறது. இம்மாதம் 15ம் திகதி வரை இந்த திரைப்பட விழா நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க